அகத்தின் அழகு முகத்தில்
தெரியும்.
அடம்பன் கொடியும்
திரண்டால் மிடுக்கு.
அற்பனுக்குப் பவிசு
வந்தால் அர்த்த ராத்திரியில்
குடை பிடிப்பான்.
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம்
பேய்
ஆட்டுக்கு வால் அளந்து
வைத்திருக்கு
ஆடத்தெரியாதவன் அரங்கு
கோணல் என்றானாம்.
ஆற்றுல போட்டாலும்
அளந்து போடு
ஆழமறியாமல் காலை விடாதே.
இடுக்கண் வருங்கால்
நகுக
உயர உயரப் பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது.
உலை வாயை மூடினாலும்
ஊர்வாயை மூடேலாது.
ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
எடுத்தேன் கவிழ்த்தேன்
எள் என்றால் எண்ணையாய்
நிற்பான்
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது.
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது.
கடுகு சிறுத்தாலும் காரம்
போகாது.
கல்லடி பட்டாலும்
படலாம் கண்ணடி படக்கூடாது
கழனி பானையில் கைவிட்டமாதிரி
கனியை விட்டு காயைத்
தின்பாளா?
காற்றுள்ள போதே தூற்றிக்
கொள்.
குடிக்கிறது கூழ்
கொப்புளிகிறது பன்னீர்.
குரைக்கிற நாய் கடிக்காது
குமர் தனியப் போனாலும்
கொட்டாவி தனியப் போகாது.
தனிமரம் தோப்பாகுமா?
துள்ளற மாடு பொதி சுமக்காது
பசி எடுத்தவனுக்கு
ருசி தெரியாது.
பசி வந்திடப் பத்தும்
பறந்திடும்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
பேச்சைக்கொடுத்து
ஏச்சை வாங்குவானேன்?
விதைக்கிற காலத்தில
தூங்கிவிட்டு அறுவடையை
நினைக்கலாமா
வெட்டிண்டுவா என்றால்
கட்டிண்டு வருவான்
வெந்த புண்ணில் வேலை
பாய்ச்சுவது போல
நூலைப் போல சேலை தாயைப்
போல பிள்ளை