Grade 3 Tamil Speech
தாய் மொழி
தமிழ்மொழி எம் தாய்
மொழி.
எம்மை பெற்றெடுத்த
எம் தாய் எம்மைத் தாலாட்டியதும்
தமிழ்மொழியில் தான்.
எம்முடன் உறவாடியதும்
இம்மொழியிலே தான்.
இன்று நாங்கள் கனடா
நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த நாடு சிறுவர்களாகிய
எங்களுக்குத் தாய்மொழியை
கற்பபதற்கு பல வசதிகளைத்
தந்துள்ளது.
இதற்கு நாங்கள் முதற்கண்
நன்றி சொல்ல வேண்டும்.
உலகத்தில் உள்ள மொழிகளில்
தமிழ்மொழியும் ஒன்றாகும்.
தமிழ்மொழி தொன்மையும்
பெருமையும் வாய்ந்தது.
இலக்கண இலக்கியங்கள்
நிரம்ப பெற்றது. சொல்வளம்
மிக்கது.
தமிழ்மொழி இயல் இசை
நாடகம் என்னும் மூன்று
பிரிவுகளைக் கொண்டது.
அதனால் தமிழ்மொழியை
முத்தமிழ் என்பர்.
தமிழ்மொழியப் பற்றி
பாரதியார்
தமிழுக்கு அமுதென்று
பேர் அந்ததமிழ்
இன்பதமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
என்று பாடியுள்ளார்
தமிழ்மொழி இலங்கை
இந்திய மலேஷிய சிங்கப்பூர்
மொரிஷியஸ் முதலான
நாடுகளிலும் வழங்கி வருகிறது.
சிறுவர்களாகிய நாங்கள்
தமிழ் மொழியைப் பிழையற
பேசவும் பிழையற எழுதவும்
நாம் முயல வேண்டும்.
தமிழிலே உள்ள நூல்களை
நாம் விரும்பிக் கற்க
வேண்டும்.
பின்பு கற்றதன்படி
ஒழுகுதல் வேண்டும்.
எதிர் காலத்தில்
தமிழர்கள் வாழும் எல்லா
நாடுகளிலும் தாய்மொழியாம்
தமிழ்மொழியை மேலும் வளர்திட
வேண்டியது சிறுவர்களாகிய
எங்ளது தலையாய பொறுப்பு
என்று கூறி விடை பெறுகிறேன்
Above text is for the Grade 3 speech for this year. Children are expected to memorize this and present to the class.